உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: 9 பேர் கொண்ட பட்டியலை திருப்பி அனுப்பிய மத்திய அரசு

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: 9 பேர் கொண்ட பட்டியலை திருப்பி அனுப்பிய மத்திய அரசு

மதுரை:

சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​களாக நியமிப்​ப​தற்​குப் பரிந்​துரைக்​கப்​பட்ட 9 வழக்​கறிஞர்​கள் கொண்ட பட்​டியலை மத்​திய அரசுதிரும்ப அனுப்​பி​யுள்​ளது. நீதிப​தி​கள் நியமனத்​தில் இடஒதுக்​கீட்​டைப் பின்​பற்​றி, உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கி, புதிய முன்​மொழிவை அனுப்​பு​மாறு மத்​திய சட்​டத் துறை கேட்​டுக் கொண்​டுள்​ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மொத்​தம் 75 நீதிபதி பணி​யிடங்​கள் உள்​ளன. தற்​போது தலைமை நீதிபதி உட்பட மொத்​தம் 56 நீதிப​தி​கள் பணி​யில் உள்​ளனர். 19 நீதிப​தி​கள் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன.


இந்​நிலை​யில், காலி​யாக உள்ள பணி​யிடங்​களை நிரப்புவதற்​காக வழக்​கறிஞர்​கள் கே.கோ​விந்​த​ராஜன், இ.வி.சந்​துரு(எ) இ.சந்​திரசேகரன், பி.​வி.​பாலசுப்​பிரமணி​யம், என்​.சி. அசோக்​கு​மார், ஆர்​.​காந்​தி, அசன்முகமதுஜின்​னா, எம்​.பி. செந்தில், ஜெ.சந்​திரன் சுந்​தர் சசிகுமார், இ.மனோகரன் ஆகியோரை சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக நியமிக்க, சென்னை உயர் நீதி​மன்​றம் மத்​திய அரசுக்கு கடந்த ஏப்​ரல் மாதம் முன்​மொழிவு அனுப்​பியது.


இந்த முன்​மொழிவு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிப​தி​யின் ஆலோ​சனைக்​காக மத்​திய அரசால் அனுப்பி வைக்​கப்​பட்டது. பின்​னர் உச்ச நீதி​மன்ற கொலீஜியம், சென்னை உயர் நீதி​மன்​றத்தின் முந்​தைய தலைமை நீதிபதியின் முன்​மொழிவை மறு​பரிசீலனை செய்​வதற்​காக திரும்ப அனுப்ப மத்​திய அரசுக்கு உத்தர​விட்​டுள்​ளது.


புதிய முன்மொழிவு... மேலும், முன்​மொழி​வுப் பட்​டியலில் இடம் பெற்​றுள்ள வழக்​கறிஞர்​கள் மற்​றும் பிற தகு​தி​யான வழக்​கறிஞர்​களின் நன்​னடத்​தையைச் சரி​பார்த்​துத் தகு​தி​யான வழக்​கறிஞர்​களை நீதிப​தி​களாக நியமிக்​கும் வகை​யில் புதிய முன்மொழிவு அனுப்​ப​வும் உச்சநீதி​மன்ற கொலீஜி​யம் கூறி​யுள்​ளது. இதையடுத்து 9 வழக்​கறிஞர்​களை நீதிப​தி​களாக நியமிக்​கும் முன்​மொழிவை சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​திக்கு மத்​திய அரசு திருப்பி அனுப்பியுள்​ளது.


இது தொடர்​பான கடிதத்​தில், உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் நியமனங்​களின்​போது பட்​டியல் சாதி​யினர், பட்​டியல் பழங்​குடி​யினர், பிற பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், சிறு​பான்​மை​யினர் மற்​றும் பெண்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம்​ வழங்​கி முன்​மொழி​வு​களை அனுப்​பு​மாறும்​ மத்​தி​ய சட்​டத்​துறை கூறி​யுள்​ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%