ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி , மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்
Sep 29 2025
141
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் & கல்ச்சுரல் மற்றும் நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியின் 12ம் ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சௌபாக்கியா மஹாலில் கொண்டாடப்பட்டது. இதில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டார். இத்துடன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி:
மேலும், நேதாஜி அகாடமி சார்பாக கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் படிப்புக்கான உபகரணங்கள் வழங்க தன்னுடைய பங்களிப்புகான நிதி உதவியை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்.
இதில் அகாடமி பயிற்சியாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?