காட்பாடி காந்தி நகரில் பெரியார் பிறந்த நாள் விழா: திமுகவினர் பங்கேற்பு!
Sep 18 2025
44

வேலூர், செப்.19-
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு காந்தி நகர் பகுதி திமுக செயலாளர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து திமுகவினர் அனைவரும் சமூக நீதி உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 10வது வட்ட திமுக பொறுப்பாளர் ஜேசிபி சுரேஷ், தேவநேசன், அரிகிருஷ்ணன், ராஜ்குமார், பேச்சாளர் கண்ணன் மற்றும் வேலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆர். விஜயகுமாரி, முன்னாள் காட்பாடி ஒன்றிய செயலாளர் தயாநிதி மற்றும் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?