காட்பாடி சுந்தரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!

காட்பாடி சுந்தரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!


வேலூர்,பிப்.1-

வேலூர் மாவட்டம், காட்பாடியில் சித்தூர் -கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுந்தரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மண்டல பூஜையும் நிறைவு பெற்றது. இந்நிலையில் சுந்தரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுந்தரியம்மனுக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து நடந்த தீப, தூப ஆராதனைக்கு பிறகு பக்தர்கள் சுந்தரியம்மனை தரிசனம் செய்தனர். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாஸ்கர் அர்ச்சகர் செய்திருந்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%