கேரள மாநிலம் கண்கவர் கண்ணூரில் பார்த்து ரசிக்க வேண்டிய 6 இடங்கள்!

கேரள மாநிலம் கண்கவர் கண்ணூரில் பார்த்து ரசிக்க வேண்டிய 6 இடங்கள்!


 

1. செயின்ட் ஏஞ்சலோ கோட்டை 

 

இது கண்ணூர்க் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணூரில் அரபிக்கடலைப் பார்த்தவாறு அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம் ஆகும். இது 1505 ல் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்டது. இது பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட வலுவான சுவர்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் இந்தியக் கட்டடக்கலை பாணிகளின் கலவைகளில் அமைந்துள்ளது. காலனித்துவ வரலாற்றில் இந்தக் கோட்டை போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷார்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.


2. பய்யம்பலம் கடற்கரை 

தங்க நிற மணலுக்கு பெயர் பெற்ற அழகிய கடற்கரை இது. இப்பகுதியில் உள்ள மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். நடைப்பயணத்திற்கு மற்றும் ஓய்வெடுப்பதற்கும் ஏற்ற இடமாக இருக்கிறது. கடற்கரையில் பசுமையான பனை மரங்கள் காணப்படுகின்றன. சூரியன் மறையும் காட்சிகளை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களிக்கின்றனர். இங்கு சூரியக் குளியல் மற்றும் நீச்சல் பிரபலமாக இருக்கிறது. 


3. முழப்பிலங்காட் டிரைவ்-இன் பீச் 

இது இந்தியாவின் மிக நீளமான 'டிரைவ் இன் பீச்' ஆகும். அரபிக்கடலில் நாலு கிலோ மீட்டருக்கு மேல் நீண்டுள்ளது. இதன் தனித்துவமான அம்சம் என்னவென்றால், மக்கள் தங்களுடைய வாகனங்களை கடலை ஒட்டிய மணல் வெளியில் நேரடியாக ஓட்டிச்செல்லலாம். இதனால் நிறைய பயணிகளையும் குடும்பத்தினரையும் ஈர்க்கிறது. கடல் காற்றை ரசிக்க, ஓய்வெடுக்க இது வசீகரமான இடம் ஆகும். 

 

4. முத்தப்பன் கோயில் 

 

கண்ணூர் அருகே உள்ள பரசீனிக்கடவு என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது முத்தப்பன் கோயில். இது நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் குறிக்கும் ஒரு தனித்துவமான நாட்டுப்புற தெய்வமான முத்தப்பன் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மீன் மற்றும் கள் ஆகியவை புனிதப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பாரம்பரியமான நிகழ்வுகளுக்கு இந்தக்கோயில் புகழ்பெற்றது.


5. அரக்கால் அருங்காட்சியகம்  

இந்த பகுதியில் உள்ள ஒரே இஸ்லாமிய அரச குடும்பமான அரக்கால் குடும்பத்திற்காக அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மனையில் அமைந்துள்ள அருங்காட்சியகம், குடும்பத்தின் பாரம்பரிய மற்றும் உள்ளூர் வரலாற்றின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும் அரச நினைவுச் சின்னங்கள், ஆயுதங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட ஏராளமான கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்துகிறது. இந்த அருங்காட்சியகம் அரக்கல் இராச்சியத்தின் கலாச்சாரம், மரபுகள் மற்றும் கடல்சார் வலிமை பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது. இது கடலோர வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.


6. ஆரளம் வனவிலங்கு சரணாலயம் 

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் 55 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஒரு பசுமையான புகலிடம். இது பல்வேறு வகையான அரிய விலங்குகள் மற்றும் உயிரினங்களை கொண்டது. பசுமையான காடுகள், புல்வெளிகள், மலையேற்ற பாதைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த சரணாலயம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாகும். இப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பறவை இனங்களை கண்டு பறவை பார்வையாளர்கள் மகிழ்ச்சியடையலாம். ஆரளம் வனவிலங்கு சரணாலயம் இயற்கை அழகையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%