ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'இந்த' அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!



வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.


அதன் கீழ், சில நடைமுறைகள் மாறும் அல்லவா? அப்படிப் பான் கார்டு எங்கெங்கு தேவை என்பதைப் பார்க்கலாம்... வாங்க...

1. முன்பு, ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் வங்கியில் இருந்து பணம் எடுத்தால் பான் கார்டு தேவை.


ஆனால், இனி ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது 10 லட்சத்திற்கு மேல் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்தால்தான் பான் கார்டு தேவை.

 

2. முன்பு, எந்த வாகனம் வாங்கினாலும் பான் கார்டு கட்டாயம் அவசியம்.


ஆனால், வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், நீங்கள் வாங்கும் வாகனத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்தைத் தாண்டினால் மட்டுமே பான் கார்டு அவசியம்.


மேலும், அதிக மதிப்புள்ள இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போதும் பான் கார்டு அவசியம்.


இதற்கு டிராக்டர்கள் மட்டும் விதிவிலக்கு.


3. புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ஹோட்டல், உணவகங்கள், அரங்குகள், ஈவென்ட் மேனேஜர்களுக்குக் கொடுக்கும் பேமென்ட் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும்.


தற்போதைய நடைமுறையில் பேமென்டில் ரூ.50,000 தாண்டினால் பான் கார்டு காட்ட வேண்டும்.


4. ரியல் எஸ்டேட்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாகப் பெற்றாலோ பான் கார்டு தேவை.


முன்பு, இந்த லிமிட் ரூ.10 லட்சமாக இருந்தது.


5. இனி அனைத்து காப்பீட்டுத் திட்டங்களுக்கும் பான் கார்டு கட்டாயம் தேவை.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%