சிந்தித்து வாழ்வோம்

சிந்தித்து வாழ்வோம்


சிந்தனை ஓர் தீபம் அது இருளில் வழி காட்டும்,

அவசரப் பாதையில் தடுமாறாமல் காப்பாற்றும்.

ஒரு முறை பேசும் முன் சிந்தித்து விட்டால் ,

எந்தவித உறவும் நட்பும் நிலைத்து நின்றிடுமே.

சிந்தித்து செயல் பட்டால் சந்தோஷம் காணலாம்,

அவசர முடிவுகள் துக்கத்தில் முடியும்.

அறிவின் கண்ணாடி சிந்தனை என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியே இல்லை வெற்றி மேல் வெற்றி நிச்சயம் ,

சிந்தித்து வாழ்ந்தால் செல்வம் சேர்க்கலாம்,

அன்பும் அமைதியும் நம் உள்ளம் நிறையச் செய்யும் என்பதால் சிந்தித்து வாழ்வோம் வெற்றிக் கனியை சுவைப்போம் 


உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%