சிபிஎம் தொடர் காத்திருப்பு போராட்டம் வெற்றி கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அரசு அலுவலர்கள் உறுதி

தஞ்சாவூர், அக். 14- குடிமனை, குடிமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் குடிமனை வழங்க வேண்டும். புதுக்குளம் தெற்கு கரையி லிருந்து செல்லும் ரெட்டைக் குளம் வாரியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நெல்லடிக்காடு பகுதி பயனாளி களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு கிளை சார்பில், நெல்லடிக்காடு கிராம நிர்வாக அலு வலர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா ளர் வி.ஆர்.கே. செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தோழர் வீ.கருப்பையா, விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றியச் செயலாளர் சி.சுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளர் வ.சிவனேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்டக் குழு உறுப்பினர் தங்க. விஜயகுமார், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.மகாலிங்கம் உட்பட ஏராள மானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நா.சுப்பிர மணியன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள், வருவாய்த் துறையினர், சிபிஎம் நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, இரண்டு மாத காலத்தில் நிறைவேற்றித் தரப்படும் என அரசு அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?