சூடான்: துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் பலி

சூடான்: துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 24 பேர் பலி


 

கார்டூமின்,


வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.


அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.


இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.


இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை ராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் ராணுவம் கைப்பற்றியது. அதேவேளை, ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.


இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு கொர்டோபென் மாகாணம் ரஹாட் பகுதியில் நேற்று வாகனம் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனத்தில் 8 குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 24 பேர் பயணித்தனர். அப்போது அந்த வாகனத்தை குறிவைத்து துணை ராணுவப்படையினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த டிரோன் தாக்குதலில் வாகனத்தில் பயணித்த 24 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் சூடானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%