
சென்னை:
சென்னையில் கே.கே. நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்திற்கு 2 வாகனங்களில் வந்த 8 அதி காரிகள், தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் துப்பாக்கி ஏந்திய 2 காவ லர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராய நகரில் ஆடிட்டர் விஜயராகவன் என்பவரது வீட்டிற்கு அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். ஆடிட்டர் விஜயராகவன் கடந்த ஆண்டு இறந்துவிட்டார் என்பது தெரியவந்ததால் சோதனை நடத்தாமல் அதிகாரிகள் திரும்பினர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சோதனை முழுமையாக நிறை வடைந்த பிறகே முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?