சென்னை விமான நிலையத்தில் 8-வது நாளாக 41 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் 8-வது நாளாக 41 விமானங்கள் ரத்து


 

சென்னை: நாடு முழு​வதும் இண்டிகோ ஏர்​லைன்ஸ் விமானங்களின் சேவைகளில் ஏற்​பட்​டுள்ள பிரச்​சினை​யால் பயணிகள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். சென்னை​யிலும் விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதிப்​படு​கின்றனர். 8-வது நாளாக நேற்​றும் சென்​னை​யில் விமான சேவை​கள் பாதிக்​கப்​பட்​டன.


நேற்று அதிகாலை​யில் இருந்து நள்​ளிரவு வரை சென்​னை​யில் இருந்து புறப்​படும் 18 விமானங்கள், வருகை தரவிருந்த 23 விமானங்கள் என மொத்​தம் 41 விமானங்கள் ரத்து செய்யப்​பட்​டன.


ரத்து செய்​யப்​பட்​டுள்ள விமானங்​களில் டெல்​லி, மும்​பை, கொல்​கத்​தா, ஹைத​ரா​பாத், பெங்​களூரு, கொச்​சி, திரு​வனந்​த​புரம், புவனேஸ்​வர், பாட்னா, ஜெய்ப்​பூர், கோவை ஆகிய இடங்​களுக்கு செல்​லக்​கூடிய​வை. இன்று (டிச.10) முதல் பிரச்​சினை​ குறை​யத் தொடங்கி, விமான சேவை அதி​கரிக்​கும் என்று கூறப்​படு​கிறது.


கட்டணம் நிர்ணயம்: இதற்​கிடையே, இண்​டிகோ விமானங்கள் அதிக அளவில் ரத்து செய்​யப்​படு​வதால், மற்ற விமானங்​களில் டிக்​கெட் கட்ட​ணம் பல மடங்கு அதிகரித்​தது.


விமான போக்​கு​வரத்து துறை இயக்​கு நரகம், கட்​ட​ணங்​கள் உயர்த்​து​வதற்கு உச்​ச வரம்பு நிர்​ண​யித்​ததைத் தொடர்ந்து, விமான டிக்​கெட் கட்டண உயர்வு குறைந்துள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%