தவெகவின் தவறு, அரசும் கவனக்குறைவு” - கரூரில் பிரேமலதா குற்றச்சாட்டு
Sep 30 2025
23

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு தவெக தவறும், அரசின் கவனக்குறைவுமே காரணம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியது: “இதற்கு அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். குறுகலான சாலையை வழங்கியுள்ளனர். உள்நோக்கத்தோடு வழங்கப்பட்டதா என தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
குறுகலான இடம், காலதாமதம், மின் தடை, போலீஸ் தடியடி, ஆம்புலன்ஸ் வருகையால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிர் பலி ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. தவெக தலைவர் விஜய் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிக்கும்போது உங்களை நம்பி வரும் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸார் அந்தளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அளிப்பதில்லை. தொண்டர்கள் படை அமைத்து தவெக உணவு, குடிநீர், நிழல் வசதி செய்து தரவேண்டும். ரோடு ஷோ போல நடத்தாமல் மாநாடு போல ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். குழந்தைகள், பெண்கள் வந்துள்ளனர். போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். அவர் பேசப்போவது 10 நிமிடம்தான். தவெகவின் தவறு, அரசின் கவனக்குறைவே இதற்கு காரணம்” என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?