திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர்-5 கீழ்பென்னாத்தூர் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சுந்தரேசுவரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு 03.12.2025 அன்று காலை 6.00 மணியளவில் அபிஷேகங்கள், அலங்காரங்கள், பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் , மகாதீபாராதனையும் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஒலிக்க, பாட்டுகள் பாடி,சங்குகள் முழங்க, பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 5.45 மணியளவில் சொக்கப்பனையும், மாலை 6.00 மணிக்கு கோவில் மேல் மகாதீபமும் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ சுந்தரேஸ்வரரை வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?