திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் - விசாரணை கமிஷன் அமைக்கிறது ஆந்திர அரசு

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் - விசாரணை கமிஷன் அமைக்கிறது ஆந்திர அரசு


 

அமராவதி: ​திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் நடை​பெற்ற கலப்பட நெய் விவ​காரம் தற்​போது விஸ்​வரூபம் எடுத்​துள்​ளது. இதில் உண்​மை​யான குற்​ற​வாளியை கண்​டு​பிடிக்க விசா​ரணை கமிஷனை அமைக்க ஆந்​திர அமைச்​சரவை ஒப்​புதல் அளித்துள்ளது.


கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கலப்பட நெய் உபயோகப்​படுத்​தி, பிர​சாதம் தயாரிக்​கப்​பட்​ட​தாக 2024-ல் சந்​திர​பாபு நாயுடு ஆட்சிக்கு வந்​ததும் பகிரங்​க​மாக அறி​வித்​தார். ஜெகன் ​மோகன் ரெட்​டி​யின் ஆட்சி காலத்​தில் நடந்த இந்த மாபெரும் குற்​றத்தை கண்​டு​பிடிக்க முதலில் ஆந்​திர அரசு சிறப்பு புல​னாய்வு குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது.


ஆனால், இக்​குழு பாரபட்​ச​மாக விசா​ரணை நடத்​தும் என்​ப​தால் சிபிஐ விசா​ரணை தேவை என ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸார் உச்ச நீதிமன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இதனை தொடர்ந்து சிபிஐ அதி​காரி​கள் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்வு குழு அமைக்கப்பட்​டது.


இந்த சிறப்பு புல​னாய்வு குழு, இது​வரை 14 பேரை கைது செய்துள்ளது. இவர்​கள் அனை​வரை​யும் நெல்​லூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்​றும் சிபிஐ நீதி​மன்​றங்​களில் ஆஜர் படுத்​தி​யது. இதில் பல்​வேறு பால் உற்​பத்தி நிறு​வனத்தை சேர்ந்​தவர்​கள் உள்​ளனர். மேலும், ஏ-34 குற்​ற​வாளி​யாக திருப்​பதி தேவஸ்​தான அதிகாரியான விஜய​பாஸ்​கர் ரெட்டி கைது செய்​யப்​பட்​டார்.


அப்​போது அவர் புல​னாய்வு குழு​வுக்கு கொடுத்த வாக்​கு மூலத்தில், “கலப்​படம் செய்த நெய்யை பரிசோதனை செய்​ததும் அதில் கலப்​படம் உள்​ளது என்​பதை அறிந்​தேன். இதனை அந்​தந்த நிறு​வனங்​களுக்கு எடுத்​துக் கூறினேன். ஆனால், அவர்​கள், எனக்கு லஞ்​சம் கொடுத்து நெய்யை தொடர்ச்​சி​யாக விநி​யோகம் செய்து வந்​தனர். இதன் மூலம் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு ரூ.118 கோடி நஷ்டம் ஏற்​பட்​டது. 2023-ல் போலே பாபா நெய் நிறுவனத்தில் இருந்து ரூ.75 லட்​சம், பிரீமியர் நிறு​வனத்​தில் இருந்து ரூ.8 லட்​ச​மும் லஞ்​ச​மாக வாங்​கினேன்" என வாக்​கு மூலம் அளித்​தார்.


இதைத் தொடர்ந்து குற்​றப்​பத்​திரிக்​கை​யும் தாக்​கல் செய்யப்பட்டது. இதனிடையே, தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி​யாக இருந்த அனில்​கு​மார் சிங்​காலை ஆந்​திர அரசு அப்​ப​த​வி​யில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக சீனியர் ஐஏஎஸ் அதி​காரி ரவிச் சந்​தி​ராவை நியமனம் செய்​துள்​ளது. ஆனால், ஜவஹர் ரெட்​டி, தர்மா ரெட்டி ஆகியோர் மீது ஆந்​திர அரசு எவ்​வித நடவடிக்கைகளை​யும் இது​வரை எடுக்க வில்​லை. மேலும், அப்போதைய அறங்​காவலர் குழுக்​கள் மீது எவ்​வித நடவடிக்கைகளும் இது​வரை இல்​லை.


இது தற்​போது ஆந்​திர அரசி​யலில் பெரும் அரசி​யல் புயலை வீச தொடங்கி உள்​ளது. இந்​நிலை​யில், நேற்று அமராவ​தி​யில் முதல்வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் நடை​பெற்ற அமைச்சரவை குழு​வில், கலப்பட நெய் விவ​காரம் குறித்து சரிவர புல​னாய்வு விசா​ரணை நடக்க வில்லை என்​ப​தால், உண்​மை​யான குற்​ற​வாளி யார் என விசா​ரிக்க விரை​வில் விசா​ரணை கமிஷன் அமைக்​க ஒரு​ மன​தாக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%