வாஷிங்டன், ஜன.
தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்திருக்கிறார்.
உலக நாடுகள் தனது பேச்சை கேட்கவில்லை என்றால் வரி விதிப்பேன் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். பின்னரும் தனது உத்தரவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கூடுதலாக வரி விதிப்பது அதிபர் டிரம்ப் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென் கொரியா அமெரிக்காவுடனான தனது ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. 2025ம் ஆண்டு ஜுலை 30 தேதி அதிபர் லீயும் நானும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சிறந்த ஒப்பந்தம் மேற்கோண்டோம். 2025ம் ஆண்டு அக்டோபர் 29 தேதி நான் கொரியாவில் இருந்தபோது இந்த விதிமுறைகளை மீண்டும் உறுதிப்படுத்தினேன். கொரிய சட்டசபை ஏன் இதை அங்கீகரிக்கவில்லை? கொரிய சட்டசபை எங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இன்னும் சட்டமாக்காததால், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்றாலும், நான் இதன்மூலம் தென் கொரியாவின் கார்கள், மரக்கடைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மற்ற அனைத்து பரஸ்பர வரிகளையும் 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி உள்ளேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?