தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் வலியுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் வலியுறுத்தல்


 

மதுரை: தாய் மொழி​யில் பயிற்​று​விப்​பதை ஊக்​குவிக்​கும் வகை​யில் தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்த வேண்​டும் என்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் கூறி​னார்.


ராமேசுவரத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற காசி தமிழ் சங்​கமம் நிறைவு விழா​வில் பங்​கேற்ற பின்​னர் நேற்று மதுரை வந்த அவர், மீனாட்சி அம்​மன் கோயி​லில் குடும்​பத்​தினருடன் சுவாமி தரிசனம் செய்​தார். கோயில் நிர்​வாகம் சார்​பில் மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தானுக்கு மரி​யாதை செய்​யப்​பட்​டது. பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:


தேசிய கல்விக் கொள்​கை​யானது 5-ம் வகுப்பு வரை மாநிலங்​களின் தாய் மொழி​யிலேயே பயிற்​று​விக்க வேண்​டும் என வலி​யுறுத்​துகிறது. தமிழகத்​தி​லும் 5-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழி​யாக இருக்க வேண்​டும் என்று பரிந்​துரைப்​ப​தால், தமிழக அரசு தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்த வேண்​டும்.


தேசிய கல்விக் கொள்கை என்​பது மத்​திய அரசுக்​கும், தமிழகத்​தில் உள்ள திமுக அரசுக்​கும் இடையே சர்ச்​சைக்​குரிய விஷய​மாக இருந்து வரு​கிறது. தமிழகத்​தில் 5-ம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழி​யாக இருக்க வேண்​டும் என்​பது​தான் தேசிய கல்விக் கொள்​கை​யின் பரிந்​துரை. இதை ஏற்​று, திமுக அரசு தமிழ் மொழியை ஊக்​குவிக்​கும் என்று நம்​பு​கிறேன்.


மும்​மொழிக் கொள்​கை​யின் கீழ் இந்தி திணிக்​கப்​படு​வ​தாகக் கூறி, தமிழக அரசு தேசிய கல்விக் கொள்​கையை எதிர்த்து வரு​கிறது. மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்​கையை எதிர்க்​கும் வகை​யில், தமிழக அரசு இரு மொழிக் கொள்​கை​யாக மாநிலக் கல்விக் கொள்​கையை வெளி​யிட்​டது. மத்​திய அரசுக்​கும், மாநில அரசுக்​கும் இடையே​யான இந்த மோதல், உச்ச நீதி​மன்​றத்​தை​யும் எட்​டி​யுள்​ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%