தேர்தல் களம்...

தேர்தல் களம்...

🤷🏻‍♂️🤷🏻‍♂️


நாளை நன்மையாய்

புலருமென்றே;

நாள்தோறும் காத்திருக்கிறோம்! 


நாம் மட்டுமா? 


கருமேகம் கிழித்து

செஞ்சுடரோன் உதிக்குமெனெக்கென

பட்டத்தரசர் காத்திருக்கும் வேடிக்கை:


காலத்தில் பூக்காத மல்லி தனக்கில்லை

எனினும் 

தனயனுக்காவது கிட்டாதா;

விடாயில் வேந்தன்:


நம்பிக்கையற்ற நம்பிக்கையில்

பம்மும் பழைய பங்காளி


இலையுதிர் காலம் முடிந்து

வசந்தம் வருகுது என

நாடற்ற ராசன் 

நாட்டமுடன் பார்த்திருக்க:


சமாதியில் கையடித்து சபதம் செய்து கொற்றவை 

சத்தமின்றி சமாதானக் கொடி ஏந்த:


தமிழ் பொய்கையில் 

தாமரை மலருமென ஒற்றைக்காலில்

கண்மூடி

சரவணபொய்கையில் தவமிருக்கும் வெகுதூர பறவை:


பானை பழையது என்றாலும்

பால் பொங்கி வந்து

தனக்கொரு கவளத்தில்

மீசை நனையும் என்ற கனவில் 

சிறுத்தை


மாம்பழம் ஒன்றுக்கு

தந்தையும் தனயனும் பங்காளியான விந்தை:


நடுத்தெருவில்

கை வீசி

புருவம் உயர்த்தி 

நாடகம் நடத்தும் நடிகன்:


நாம் தமிழர் குரல் ஓங்கி ஒலித்து

தமிழர் செவியில் ஏறிடுமா?


போர் முரசு ஒலிக்கும்

நேரம் விரைவில்


வெற்றி முரசொலி 

எட்டு திக்கும் கேட்கும்; நிச்சயம்

எவர் முரசு ஒலிக்கும்?

எக்காளம் எவர் கையில் உயரும்?


சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%