இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 100 வயதான நல்லகண்ணு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி வீட்டில் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நல்லகண்ணுவை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வந்தனர். நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரை யீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இதையடுத்து உடல் நிலையில் முன்னேற் றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நல்லகண்ணு கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி வீடு திரும்பினார். இதை யடுத்து, உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 16 ஆம் தேதி நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நல்லகண்ணு மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?