
*எங்கள் பகுதி செய்தி*
*நவராத்திரி விடையாற்றி விழா*
தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி V.P. கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஶ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோவிலில் நவராத்திரி விடையாற்றி விழாவை முன்னிட்டு நேற்று (03.10.2025) நமது ராமானுஜர் உழவாரப்பணி குழுவினருக்கு பாராட்டு விழா,பெருமாள் ஏகாந்த சேவை தாயார் சிறப்பு அலங்காரம் மூலப்பெருமாள் சந்தன காப்பு அலங்காரம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நவராத்திரி விழா உபயதார்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S. சேஷாத்திரி அவர்கள் மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்.
செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?