நாகை அருகே கிராம நிர்வாக அலுவலர் மர்ம மரணம்

நாகை அருகே கிராம நிர்வாக அலுவலர் மர்ம மரணம்


நாகை, நவ. 8–


நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் கிராம நிர்வாக அலுவலராக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் கிராம நிர்வாக அலுவலராக பணியை தொடர்ந்தார்.


இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.


இந்நிலையில் நாகை கிழக்கு கடற்கரைச் சாலை செல்லூர் அருகே சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸார் நிகழ்விடத்திற்குச் சென்று சாலையோரத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட சடலம் யார் என்பது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வழக்கரை பிரதான சாலையைச் சேர்ந்த தையான் மகன் ராஜாராமன் (38) என்பது தெரியவந்தது.


கிராம நிர்வாக அலுவலர் தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%