நீங்கள் வரைந்த ஓவியங்களை விற்க வேண்டுமா?: ஓவிய சந்தையில் விற்க விண்ணப்பிக்கலாம்

நீங்கள் வரைந்த ஓவியங்களை விற்க வேண்டுமா?: ஓவிய சந்தையில் விற்க விண்ணப்பிக்கலாம்

சென்னை,


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-


கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் வகையில், சென்னையில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவியச் சந்தை’ திட்டத்தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


அரசாணையின் அடிப்படையில் சென்னையில், 2025 செப்டம்பர் திங்களில் மூன்று நாட்கள் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டம் செயல்படுத்திட கலை பண்பாட்டுத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் இத்திட்டத்தில் பயன்பெற ஏதுவாக, தாங்கள் காட்சிப்படுத்தி, விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ள கலைப்படைப்புகளின் விவரங்கள், அதற்குரிய புகைப்படங்கள், கலைப் படைப்புகளின் விற்பனை தொகை ஆகிய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தினை 15.9.2025-க்குள், பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%