பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்ரோ ரயில் இடைநிலை சீரமைப்பு பணி நிறைவு

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்ரோ ரயில் இடைநிலை சீரமைப்பு பணி நிறைவு


 

சென்னை: பயணி​களின் பாது​காப்பை உறுதி செய்ய அனைத்து மெட்ரோ ரயில்​களி​லும் இடைநிலை சீரமைப்​புப் பணி​கள் நிறைவு​பெற்​றுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அனைத்து மெட்ரோ ரயில்​களும் குறிப்​பிட்ட கால இடைவெளி​களில் திட்​ட​மிடப்​பட்ட பராமரிப்​புப் பணி​களுக்கு உட்​படுத்​தப்​படு​கின்​றன.


ஒவ்​வொரு மெட்ரோ ரயிலும் மாதாந்​திர காலாண்​டு, அரை​யாண்டு மற்​றும் ஆண்டு சோதனை​கள் மூலம் முழு​வது​மாக ஆய்வு செய்​யப்​பட்டு பராமரிக்​கப்​படு​வதுடன், தகு​திச் சான்​றும் வழங்​கப்​படு​கிறது. இது தவிர ஒவ்​வொரு மெட்ரோ ரயிலும் ஒரு பெரிய அளவி​லான இடைநிலை சீரமைப்​புப் பணி​களுக்கு உட்​படுத்​தப்​படு​கின்​றன.


இந்த சீரமைப்​புப் பணி​யின்​போது, ரயில் முழு​மை​யாகப் பிரிக்​கப்​பட்டு ஆய்வு செய்​யப்​படு​கிறது. சக்​கரங்​கள் மற்​றும் சஸ்​பென்​ஷன் அமைப்​பு​கள் உட்பட ரயி​லின் அடிப்​பகு​தி​யில் உள்ள முக்​கிய பாகங்​கள் அகற்​றப்​பட்​டு, பரிசோ​திக்​கப்​பட்​டு, தேவைப்​படும் இடங்​களில் பழுது​பார்க்​கப்​பட்​டு, மீண்​டும் வண்​ணம் பூசப்​படு​கின்​றன. தேய்ந்​து​போன பாகங்​கள் மாற்​றப்​படு​கின்​றன.


மென்​மை​யான பயணத்தை உறுதி செய்​வதற்​காக சக்​கரங்​கள் மறு​வடிவ​மைப்பு செய்​யப்​படு​கின்​றன. மேலும் மறைந்​திருக்​கும் குறை​பாடு​களைக் கண்​டறிய மேம்​பட்ட முறை​களைப் பயன்​படுத்தி அச்​சுகள் சோதிக்​கப்​படு​கின்​றன. பிரேக்​கு​கள் மின் சாதனங்​கள் மற்​றும் குளிரூட்​டும் இயந்​திரங்​கள் போன்ற அமைப்​பு​கள் முழு​மை​யாகப் பராமரிக்​கப்​படு​கின்​றன.


பாகங்​கள் மீண்​டும் பொருத்​தப்​பட்ட பிறகு, ரயில் விரி​வான பாது​காப்பு மற்​றும் செயல்​திறன் சோதனை​களுக்கு உட்​படுத்​தப்​படு​கிறது. இதில் பிர​தான வழித்​தடங்​களில் வெவ்​வேறு வேகங்​களில் சோதனை ஓட்​டங்​கள் ஆகியவை அடங்​கும்.


அனைத்து பாது​காப்பு மற்​றும் செயல்​திறன் தரங்​களை​யும் பூர்த்தி செய்த பின்​னரே, தகு​தி​வாய்ந்த அதி​காரி​யால் அந்த ரயில் பயணி​கள் சேவைக்கு உகந்​தது எனச் சான்​றளிக்​கப்​படு​கிறது.


அந்த வகை​யில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் தனது முழு மெட்ரோ ரயில் தொகு​திக்​கான திட்​ட​மிடப்​பட்ட சீரமைப்​புப் பணியை வெற்​றிகர​மாக நிறைவு செய்​துள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%