கவிஞர் இரா.இரவி.
மனிதன் அன்று விமானம் கண்டுபிடிக்க
மனதில் காரணமான காரணி பறவை ! ஆறு அறிவு மனிதனால் முடியாது
அஃறிணை பறவையால் பறக்க முடியும் !
சிறகுகள் உள்ள எல்லாப் பறவைகளும்
சிறகடித்துப் பறப்பதில்லை வானில் !
சிறகுகளின் பயனை உணராது உள்ளன
சிந்தையைப் பறந்திட பயன்படுத்தவில்லை !
இப்படித்தான் இன்றும் சில மனிதர்களும்
இனிய வாய்ப்பையைப் பயன்படுத்தவில்லை !
சின்னக் குருவியும் பறவை இனம்தான்
பெரிய பருந்தும் பறவை இனம்தான் !
குருவியின் இயல்பு மிக மிதமானது
பருந்தின் இயல்பு மிக முரடானது !
மனிதர்களில் குருவிகளும் உண்டு
மனிதர்களில் பருந்துகளும் உண்டு !
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%