பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவு

 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​திய பிறகு மூடப்​பட்ட சுற்​றுலாத் தலங்​களில் பெரும்​பாலானவற்றை மீண்​டும் திறக்க துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்​தர​விட்​டுள்​ளார்.


ஜம்மு காஷ்மீர் பஹல்​காம் சுற்​றுலாத் தலத்​தில் கடந்த ஆண்டு ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் திடீர் தாக்​குதல் நடத்​தினர். அதில் 26 பேர் கொல்​லப்​பட்​டனர். அவர்​களில் 25 பேர் சுற்​றுலாப் பயணி​கள். இதையடுத்​து, பாது​காப்​புக் கருதி 48 சுற்​றுலாத் தலங்​கள் மூடப்​பட்​டன.


இந்​நிலை​யில், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு கடந்த 10 மாதங்​களாக காஷ்மீர் சுற்​றுலா பாதிக்​கப்​பட்​டது. பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்டு சுற்​றுலாத் தலங்​கள் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதுகுறித்து உயர​தி​காரி​களு​டன் விரி​வான ஆலோ​சனை நடத்​தினேன். அதன் அடிப்​படை​யில் தற்​போது 14 சுற்​றுலாத் தலங்​களை உடனடி​யாக திறக்க உத்​தர​விட்​டுள்​ளேன்.


அந்​தப் பகு​தி​களில் உள்​ளூர் மக்​கள் மற்​றும் சுற்​றுலாப் பயணி​கள் அச்​சமின்றி சென்று வரலாம். அதற்​கான முழு பாது​காப்பு ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்.


மொத்​த​முள்ள 48 சுற்​றலாத் தலங்​களில் இதுவரை 42 சுற்​றுலாத் தலங்​கள் திறக்​கப்​பட்டு விட்​டன. மீத​முள்ள 6 சுற்​றுலாத் தலங்​கள் விரை​வில் திறக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


இதற்​கிடை​யில், கடந்த ஜனவரி மாதம் மட்​டும் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட சுற்​றுலாப் பயணி​கள் காஷ்மீர் வந்து சென்​றுள்​ளனர். தற்​போது ஜம்மு காஷ்மீரில் பனிப்​பொழிவு அதி​கரித்​துள்​ள​தால், சுற்​றுலாப் பயணி​களின் வருகை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. இதன் மூலம் காஷ்மீரில் சுற்​றுலா தற்​போது இயல்பு நிலைக்கு திரும்​பி​யிருப்​ப​தாக அதி​காரி​கள்​ தெரிவித்​தனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%