புதிய ஓட்டம் !

புதிய ஓட்டம் !

கவிஞர் இரா .இரவி !


காவிரியில் வரும் தண்ணீர் இன்று புதிய ஓட்டம் 

கர்நாடகத்தில் நிரம்பியதால் தமிழகத்தில் பாய்ந்தது !


சீறிப்பாய்ந்து வரும் நதியை ஓட விடுங்கள் 

சிறைப்பிடித்து வைக்கும் சின்னப்புத்தியை விடுங்கள் !


இரண்டு நாடுகள் கூட அமைதியாகப் பகிர்கின்றன !

ஒரே நாட்டில் பகிர்வதில் சண்டை வழக்கு ஏனோ ?


இயற்கையைச் சொந்தம் கொண்டாட உரிமையில்லை 

இயற்கையைச் சிதைக்காமல் இயல்பாக ஓட விடுங்கள் !


பகிர்ந்து உண்டு வாழ வேண்டுமென்று அன்றே 

பகர்ந்தார் உலகப்பொது மறை தந்த திருவள்ளுவர் !


மூன்று போகம் விளைந்திட்ட தஞ்சையில் இன்று 

ஒரு போகத்திற்கு தண்ணீர் இன்றித் தவிக்கின்றனர் !


யானைக் கட்டிப் போரடித்த தமிழக மண்ணில் 

யாசித்து நிற்கின்றோம் தண்ணீர் வேண்டி !


உச்சநீதி மன்றம் உரைத்தால் வேறு வழி இல்லை 

உடனே நீட் தேர்வு அமுல் என்று சொல்வோர் !


உச்சநீதி மன்றம் தீர்ப்பில் காவிரி மேலாண்மை 

உடனே அமைக்கச் சொன்னால் கேட்காதது ஏனோ ?


உழவர்களின் துன்பத்தை சற்றே உணர்ந்து பாருங்கள் 

உயிரை மாய்த்து வருவது உங்களுக்குத் தெரியவில்லையா ?


தமிழகத்திற்கு நியாயமாகச் சேர வேண்டிய தண்ணீரை 

தமிழகத்திற்கு ஓடிவர உடன் அனுமதியுங்கள் !


நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை 

நல்லதாக இருக்கட்டும் நடக்கட்டும் புதிய ஓட்டம் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%