வட்டாட்சியர் பதவி உயர்வு விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் தற்போதை ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் வருகிற 19 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் டி.என். பி.எஸ்.சி கடந்த 2029 - 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற வருவாய் உதவியாளராக கோவையில் பணி யில் சேர்ந்த உமாபதி, நாட்ராயன் ஆகியோர் துணை வட்டாட்சி யராக 2018 ஆம் ஆண்டும், சிறப்பு வட்டாட்சியராக 2022 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றனர். பின்னர், மீண்டும் துணை வட்டாட்சியராக இவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து முறையிடப்பட் டது. அதே நேரம் உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் முதலில் பிறப்பித்த சுற்றறிக்கை அரசு திரும்ப பெற்றுள்ளது. இதையடுத்து தங்களுக்கு மீண்டும் வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்கக் கோரி நீதிமன்றத்தில் இருவரும் முறையிட்டனர். இதனை நீதிமன்றம் ஏற்றது. ஆனால், இதன்பிறகு வெளியி டப்பட்ட வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் இவர்கள் பெயர் இல்லாத தால், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இருவரும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே இளந்திரையன், கோவை ஆட்சியரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். அவர் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமினில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன் புதனன்று விசாரணைக்கு வந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் ஆஜரா னார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, கோவை மாவட்ட ஆட்சியராக கடந்த பிப்ரவரி மாதம் தான் பவன் குமார் பதவியேற்றார். உயர்நீதி மன்ற உத்தரவின் போது கோவை ஆட்சியராக ஐ.ஏ.எஸ் அதி காரி கிராந்தி குமார் தான் பதவி வகித்தார், என்றார். இதை ஏற் றுக் கொண்டு நீதிபதி இந்த வழக்கை வருகிற 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்று கோவை மாவட்ட முன்னாள் ஆட்சி யர் கிராந்தி குமார், தற்போதைய ஆட்சியர் பவன் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?