மும்பையில் 4 வழி மேம்பாலம் திடீரென 2 வழியாக மாறும் புகைப்படம் - ‘ஆபத்து இல்லை’ என எம்எம்ஆர்டிஏ விளக்கம்

மும்பையில் 4 வழி மேம்பாலம் திடீரென 2 வழியாக மாறும் புகைப்படம் - ‘ஆபத்து இல்லை’ என எம்எம்ஆர்டிஏ விளக்கம்


 

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்பை அருகே மீரா- பயந்​தர் பகுதி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய மேம்​பாலம் 4 வழிகளி​ல் இருந்து திடீரென 2 வழிகளாக குறுகிச் செல்​வது தொடர்​பான புகைப்​படம் சமூக வலை​தளங்​களில் பரவி பொது​மக்​களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி​யது.


இதையடுத்​து, இந்த மேம்​பால கட்​டமைப்​பில் எந்​த​வித வடிவமைப்பு குறை​பாடும் இல்​லை. அதேபோன்று ஆபத்​தும் இல்லை என்று மும்பை பெருநகர பிராந்​திய மேம்​பாட்டு ஆணையம் (எம்​எம்​ஆர்​டிஏ) விளக்​கம் அளித்​துள்​ளது.


இதுகுறித்து அந்த ஆணை​யத்​தின் அதி​காரி​கள் கூறுகை​யில், ”மேம்பாலத்​தின் தற்​போதைய வடிவ​மைப்பு என்​பது இடவசதி மற்றும் எதிர்​கால விரி​வாக்க திட்​டங்​களை அடிப்​படை​யாகக் கொண்​டது. பயந்​தர் (கிழக்​கு) நோக்கி இரண்டு வழிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. எதிர்​காலத்​தில் பயந்​தர் (மேற்​கு) பகு​தியை இணைக்க கூடு​தலாக இரண்டு வழிகளுக்கு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. ரயில்வே வழித்​தடத்​தைக் கடந்து பாலத்தை நீட்​டிக்​கும்​போது இந்​தச் சிக்​கல் சரி​யாகி​விடும்” என்றனர்.


அதி​காரி​களின் இந்த பதிலை சமூக ஆர்​வலர் அஞ்​சலி தமானியா நிராகரித்​துள்​ளார். ”கடந்த 2022-ல் டாடா குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் சைரஸ் மிஸ்​திரி உயி​ரிழந்​ததற்கு பாலத்​தின் தவறான வடிவ​மைப்பே காரணம். அதே தவறை எம்​எம்​ஆர்​டிஏ மீண்​டும் செய்​கிறது” என்று தமானியா குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.


வழக்​கறிஞர் கிருஷ்ணா குப்தா கூறுகை​யில்,”பொது​மக்​கள் உயிருடன் அதி​காரி​கள் விளை​யாடு​கிறார்​கள். தரமற்ற பணி​களுக்​காக முன்பு கருப்​புப் பட்​டியலில் வைக்​கப்​பட்ட நிறு​வனம் இப்​போதும் பணிகளை மேற்​கொண்​டு வரு​கிறது” என்​றார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%