குடியரசுத் தலைவர் உரையின்போது விபி ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: மன்னிப்பு கேட்க அமைச்சர் வலியுறுத்தல்

குடியரசுத் தலைவர் உரையின்போது விபி ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: மன்னிப்பு கேட்க அமைச்சர் வலியுறுத்தல்


 

புதுடெல்லி: நாடாளு​மன்ற கூட்​டுக் கூட்​டத்​தில் நேற்று குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு உரை​யாற்​றி​னார். அப்​போது, மகாத்மா காந்தி ஊரக வேலை​வாய்ப்​புத் திட்​டத்​துக்கு மாற்​றாக மத்​திய அரசு புதி​தாக கொண்டு வந்​துள்ள விபி ஜி ராம் ஜி சட்​டம் குறித்து குடியரசுத் தலை​வர் முர்மு தனது உரை​யில் குறிப்​பிட்​டார்.


இதற்கு எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து அமளியில் ஈடு​பட்​டனர். அவர்​களின் கடும் எதிர்ப்​புக்​கு இடையே திர​வுபதி முர்மு தொடர்ந்து உரை​யாற்​றி​னார். இருந்​த​ போதும் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் இந்த புதிய சட்​டத்தை வாபஸ் பெற வேண்​டும் என்​றும், ஏற்​கெனவே உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலை​வாய்ப்​புத் திட்​டத்தை நாடு முழு​வதும் அமல்​படுத்​த வேண்டும் என்​றும் கூறி கோஷம் எழுப்​பினர். இதனால் அவை​யில் கூச்​சலும் குழப்​ப​மும் ஏற்​பட்​டது.


இந்​நிலை​யில் எதிர்க்​கட்​சிகளின் போராட்​டத்​துக்கு மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்டா கடும் கண்​டனம் தெரி​வித்​தார். இந்த சம்​பவத்​துக்​காக எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் மன்​னிப்​புக் கோர​ வேண்​டும் என்று அவர் அவை​யில் வலி​யுறுத்​தி​னார்.


இதுதொடர்​பாக நாடாளு​மன்ற விவ​காரத்​ துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு செய்​தி​யாளர்​களிடம் பேசும்​போது, ”குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு கூட்​டுக் ​கூட்​டத்​தில் உரை​யாற்​றிக் கொண்​டிருந்​த​போது எதிர்க்​கட்​சிகள் நடந்து கொண்ட விதம் சரியல்ல. அவர்​கள் நாடாளு​மன்​றத்தை அவமானப்​படுத்தி விட்டனர். இந்த சம்​பவத்​துக்​காக காங்​கிரஸ் மற்​றும் அதன் கூட்டணிக் கட்​சிகளை நாட்டு மக்​கள் மன்​னிக்க மாட்​டார்​கள். நாடாளு​மன்ற உறுப்​பினர்​களாக இருந்​து​ கொண்டு அவை​யின் கண்​ணி​யத்​தைக் குறைக்​கும்​ செயலில் ஈடு​படலா​மா?” என்​றார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%