மூளைச்சாவடைந்த 61 வயது விவசாயி உடல் உறுப்பு தானம் செய்ததில் 5 பேருக்கு மறுவாழ்வு

கோவை, அக். 1–
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி (வயது 61) அவரது மனைவி ஆனந்தநாயகி. மகன்கள் சிபிசக்கரவர்த்தி மற்றும் பூங்கபிலன் ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் கடந்த 28 ஆம் தேதி இரவு 7.15 மணி அளவில் இரண்டு சக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொழுது அவிநாசி அருகில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி ஆனந்தநாயகி, மகன்கள் சிபிசக்கரவர்த்தி மற்றும் பூங்கபிலன் ஆகியோர் ராமசாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்கள். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், கண்கள், தோல் மற்றும் எலும்பு, ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் கேஎம்சிஎச் மருத்துவமனைக்கும், கண்கள், தோல் மற்றும் எலும்பு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
கேஎம்சிஎச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் நல்ல பழனிசாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய ராமசாமி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?