மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அக்.6-ல் தொடக்கம்

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அக்.6-ல் தொடக்கம்

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி அக்​டோபர் 6-ம் தேதி தொடங்க உள்​ளது. அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அந்த மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை மேற்​கொள்ள தேர்​தல் ஆணை​யம் முடிவு செய்​துள்​ளது.


இதற்​காக தலைநகர் கொல்​கத்​தா​வில் தேர்​தல் அலு​வலர்​களுக்​கான சிறப்பு முகாம் அண்​மை​யில் நடை​பெற்​றது. மாநில தலைமை தேர்​தல் அதி​காரி மனோஜ் அகர்​வால் தலை​மை​யில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்​சி​யர்​கள், மூத்த அரசி​யல் அதி​காரி​கள் பங்​கேற்​றனர். அப்​போது வரும் அக்​டோபர் 6-ம் தேதி வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை தொடங்க முடிவு செய்​யப்​பட்​டது.


இதுகுறித்து மேற்​கு​வங்க தேர்​தல் ஆணைய வட்​டாரங்​கள் கூறிய​தாவது: மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான ஆயத்​தப் பணி​களை இப்​போதே தொடங்​கி​விட்​டோம். தற்​போது மாநிலம் முழு​வதும் 80,681 வாக்​குச் சாவடிகள் உள்​ளன.


வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூடு​தலாக 14,000 வாக்​குச்​சாவடிகளை அமைக்க உள்​ளோம். பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யின்​போது எதிர்க்​கட்​சிகள் தரப்​பில் பல்​வேறு புகார்​கள் எழுப்​பப்​பட்​டன. எனவே மேற்​கு​வங்​கத்​தில் எவ்​வித பிரச்​சினை​யும் இன்றி வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணியை மேற்​கொள்ள திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது.


இந்த பணி​யில் 32,000 அரசு அலு​வலர்​கள் மற்​றும் ஆஷா மற்​றும் அங்​கன்​வாடி ஊழியர்​களை ஈடு​படுத்த முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. இவர்​கள் வீடு, வீடாக சென்று வாக்​காளர்​களின் விவரங்​கள், ஆவணங்​களை சேகரிப்​பார்​கள். வாக்​காளர்​களின் விவரங்​களை எளி​தாக பதிவேற்ற தேர்​தல் ஆணை​யத்​தின் இணை​யதளம் மேம்​படுத்​தப்​பட்டு உள்​ளது.

இவ்​வாறு தேர்​தல்​ ஆணை​ய வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%