யுஜிசி விதிமுறைகளில் பாகுபாடு இல்லை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி
Jan 29 2026
19
புதுடெல்லி: உயர்கல்வி நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளில் பாகுபாடு காட்டப்படாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா மற்றும் பயல் தட்வி ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து, அவர்களது தாய்மார்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2012ம் ஆண்டின் பழைய விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான 2026-ம் ஆண்டின் புதிய விதிமுறைகளை யுஜிசி கடந்த 13ம் தேதி வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து இந்த விதிமுறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சாதி ரீதியான பாகுபாட்டுக்கு ஒரு முழுமையற்ற வரையறையை தந்துள்ளதாகவும் இதன் மூலம் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய நிறுவன ரீதியான பாதுகாப்பை இது மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறும்போது, "யார் மீதும் பாகுபாடு காட்டப்படாது. அதேபோல, பாகுபாடு என்ற பெயரில் இந்த விதிமுறைகளை யாரும் தவறாகப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படாது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் யுஜிசி ஆகியவற்றுக்கு இதில் பொறுப்பு உள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டே அமையும்" என்றார்.
பாகுபாடு குறித்த புகார்களை விசாரிக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இதில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி, நிதி சார்ந்த ஆலோசனைகளை வழங்க இந்த மையம் செயல்படும். கல்வி நிறுவன வளாகத்துத்குள் எவ்வித பாகுபாடும் நடக்காமல் இருப்பதை கண்காணிக்க படைகள் உருவாக்கப்படும்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?