ராமேஸ்வரத்தில் தை அமாவாசையை முன்னிட்டு குவிந்த மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சிறப்புமிக்க தைஅமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே கடலில் பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் நீராடிவிட்டு தீர்த்தக்களில் குளித்துவிட்டு ராமநாதசுவாமியை குடும்பத்துடன் தரிசித்து வருகின்றனர் தர்பணம் செய்பவர்கள் கடற்கரையில் ஐயர்கள் முன்பு அமர்ந்து அவரவர் தாய் தந்தையை நினைத்து செய்து பித்ருஉருண்டையை கடலில் கரைத்து நீராடிவருவார்கள் தர்பணம் செய்ய ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று செய்துவருகின்றனர் கடலில் குளிப்பவர்களும் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர் தை அமாவாசையை யோட்டி ராமேஸ்வரம் காவல்நிலையம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மதுரை நெல்லை திருச்செந்தூர் என பல பகுதியில் இருந்து கூடுதலாக சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படுகின்றன மாவட்டத்தில் உள்ள இதர பகுதிகளான மாரியூர் மூக்கையூர் கன்னிராஜபுரம் நரிப்பையூர் பகுதிகளுக்கும் ஏராளமான பொதுமக்கள் சென்று கடலில் குளித்து நீராடிவருகின்றனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?