சென்னை: தெற்கு வங்கக் கடல் பகுதி யில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி யுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மை யம் தெரிவித்துள்ளது. கிழக்கு பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திங்க ளன்று காலை காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது மேலும் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடலை நோக்கி நகரும். இதன் காரணமாக பிப்ரவரி 18 முதல் 21 வரை தமிழ கத்தில் ஓரிரு மாவட்டங் களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பில்லை. 2002ஆம் ஆண்டுக் குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உரு வாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?