வங்கதேசத்தில் கலவரங்களை ஏற்படுத்த முந்தைய அமெரிக்க அரசு நிதி அளித்தது: ஷேக் ஹசீனா மகன் குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் கலவரங்களை ஏற்படுத்த முந்தைய அமெரிக்க அரசு நிதி அளித்தது: ஷேக் ஹசீனா மகன் குற்றச்சாட்டு


 

வர்ஜீனியா: வங்​கதேசத்​தில் கலவரங்​களை ஏற்​படுத்த ஜோ பைடன் தலை​மையி​லான முந்​தைய அமெரிக்க அரசு நிதி அளித்தது என்று வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் மகன் சஜீப் வசீத் குற்​றம்சாட்​டி​யுள்​ளார்.


வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதி​ராக நிகழ்ந்த கலவரங்​களை தொடர்ந்து அந்​நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளி​யேறி இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். கலவரத்தை ஒடுக்​கிய​போது ஏற்​பட்ட வன்​முறை மற்​றும் உயிரிழப்பு குற்​றங்​களுக்​காக அவருக்கு அந்​நாட்டு நீதி​மன்​றம் அண்​மை​யில் மரண தண்​டனை விதித்​தது. பொருளா​தார நிபுணர் முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால அரசின் ஆட்​சி​யில் இத்​தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. ஷேக் ஹசீ​னாவை தங்களிடம் ஒப்​படைக்க வேண்​டும் என இந்​தி​யா​விடம் யூனுஸ் அரசு கேட்​டுக்​கொண்​டுள்​ளது.


இந்​நிலை​யில் அமெரிக்​கா​வில் வசித்து வரும் ஷேக் ஹசீ​னா​வின் மகன் சஜீப் வசீத் கூறிய​தாவது: வங்​கதேசத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​படுத்த ஜோ பைடன் தலை​மையி​லான முந்​தைய அமெரிக்க அரசு மில்​லியன் ​கணக்​கில் டாலர்​களை செல​விட்​டுள்​ளது. இதை இப்​போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புக்​ கொண்​டுள்​ளார்.


ஆனால் ட்ரம்ப் ஆட்​சி​யில் வங்​கதேசம் தொடர்​பான அமெரிக்க அரசின் அணுகு​முறை மாறி​விட்​டது. வங்​கதேசத்​தில் தீவிர​வாத அச்​சுறுத்​தல் மற்​றும் இஸ்​லாமிய அடிப்​படை​வாதத்​தின் எழுச்சி குறித்து அதிபர் ட்ரம்ப் மிகுந்த அக்​கறை கொண்​டுள்​ளார். கடந்த ஆண்டு வங்​கதேசத்​தில் எதிர்க்​கட்​சிகளால் புறக்​கணிக்​கப்​பட்ட பொதுத் தேர்​தலுக்கு பிறகு, ஜோ பைடன் அரசு எதிர்​மறை​யான கருத்​துகளை தெரி​வித்​தது.


இந்​தியா எப்​போதும் நல்ல நண்​ப​ராக இருந்து வரு​கிறது. என் தாயின் உயிரை இந்​தியா காப்​பாற்​றி​யுள்​ளது. அவர் வங்கதேசத்தை விட்டு வெளி​யேற​வில்லை என்​றால் தீவிரவாதிகள் அவரை கொன்​றிருப்​பார்​கள். என் தாயின் உயிரை காப்​பாற்றியதற்​காக பிரதமர் மோடி அரசுக்கு நான் என்​றென்​றும் நன்​றி​யுள்​ளவ​னாக இருக்​கிறேன்.


மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​ப​டாத சட்​ட​விரோத அரசு வங்கதேசத்தில் உள்​ளது. எனது தாய்க்கு மரண தண்​டனை விதித்​த​போது நீதி​மன்ற நடை​முறை​களை அந்த அரசு பின்பற்றவில்லை. விசா​ரணையை விரைவுபடுத்த சட்​டங்​களை திருத்​தினர். வழக்​கறிஞர்​கள் வைத்​துக்​கொள்ள எனது தாயார் அனு​ம​திக்​கப்​பட​வில்​லை.


விசா​ரணைக்கு முன் 17 நீதிப​தி​கள் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர். அனுபவம் இல்லாத அரசியல் தொடர்புடையவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%