வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு முழு ஆதரவு: ஐசிசிக்கு பாக். வாரியம் கடிதம்

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு முழு ஆதரவு: ஐசிசிக்கு பாக். வாரியம் கடிதம்


 

2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணியின் பங்கேற்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கடிதம் எழுதி, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.


இந்தக் கடிதத்தின் நகல் ஐசிசி வாரிய உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ஆங்கில கிரிக்கெட் இணையதளம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, வங்​கதேச அரசின் விளை​யாட்​டுத் துறை ஆலோ​சகர் ஆசிஃப் நஸ்​ருல், “பிசிசிஐ தரும் அழுத்தத்தின் காரண​மாக ஐசிசி எங்​களுக்கு அழுத்​தம் தர முயற்​சித்​தால் நாங்​கள் அதற்கு அடிபணிய மாட்​டோம். எந்த ஒரு காரண​முமின்றி ஐசிசி வைக்​கும் நிபந்தனைகளை நாங்​கள் ஏற்​றுக்​கொள்ள மாட்​டோம்.


கடந்த காலங்​களில் பாகிஸ்​தான் அணி இந்​தி​யா​வில் கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாட மாட்​டோம் எனக் கூறிய​தால், போட்டி நடத்​தப்​படும் இடங்​களை ஐசிசி மாற்றியது. தர்க்​கரீ​தி​யான அடிப்​படை​யில் மைதானத்தை மாற்​று​மாறு நாங்​கள் கேட்​டுள்​ளோம், மேலும் நியாயமற்ற அழுத்​தத்​தைக் கொடுத்து இந்​தி​யா​வில் விளை​யாடு​மாறு எங்​களை வற்​புறுத்​த முடி​யாது” என்று கூறியிருந்தது. வங்கதேசத்தின் இந்த நிலைப்பாட்டுக்குத்தான் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%