
பகல்காம் தீவிரவாதிகள் மூன்று பேர்
கொல்லப்பட்டனர். ஆபரேஷன்
சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்
ஜனாதிபதியின் கேள்விகளுக்கு
ஆகஸ்ட் 19ஆம் தேதி விசாரணை
நடைபெறும். கிண்டியில்
ஒருங்கிணைந்த போக்குவரத்து
மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வெண்டைக்காய் ரத்த அழுத்தத்தை
குறைக்கும் தன்மை உடையது
என்ற கட்டுரை நல்ல தகவல்.
ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றிக்கு
பாராட்டுக்கள். எல்லை தாண்டி
மீன்பிடித்த ஒன்பது
ராமேஸ்வரம்
மீனவர்களை இலங்கை கடற்படை
கைது செய்தது. இது எப்போதும்
தொடர்கதையாக நடக்கும்
செய்தி தான். நெல்லை குரலோன்
அவர்கள் மது புகை இவற்றை
அறவே ஒழிக்க வேண்டும் என்று
தனது கவிதையில் அழுத்தம்
திருத்தமாக கூறி இருப்பது
பாராட்டத்தக்கது. முத்து ஆனந்த்
அவர்களின் காதல் கவிதை
ஒரு காதல் ஓவியம். எலுமிச்சை
தோலில் இத்தனை நன்மைகள்
இருப்பது இப்போதுதான் தெரிய
வந்தது. அனைத்து குடும்ப
தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம்
வழங்கப்படும் என புதுச்சேரி அரசு
அறிவிப்பு. இனி ரோட்டோரங்களில்
உள்ள டீக்கடைகளும் கண்டிப்பாக
லைசன்ஸ் பெற வேண்டும் என
தமிழக அரசு அறிவிப்பு.
தூத்துக்குடியில் 2000 ஏக்கரில்
கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்
என அமைச்சர் அறிவிப்பு.
பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல்
முறையில் பிச்சை எடுத்து வருகிறார்.
மூதாட்டி இடம் 77 லட்சம் டிஜிட்டல்
முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது
பீகாரில் வளர்ப்பு நாய்க்கு
இருப்பிடச் சான்று வழங்கப்பட்டுள்ளது
போர் நிறுத்தம் செய்ய தாய்லாந்து
கம்போடியா ஒப்புதல் அளித்துள்ளது
உக்ரைன் போரை 12 நாட்களுக்குள்
நிறுத்த வேண்டும் என ட்ரம்ப்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அன்றாடம் செய்திகளை நமக்கு
உடனுக்குடன் வழங்குவது
தமிழ்நாடு இ பேப்பர் முன்னிலை
வகிக்கிறது.மேலும் வாசகர்களாகிய
நாம் அனைவரும் தலைக்கு
ஒரு ஐந்து நபர்களை ஆவது
தெய்வம் இதழுக்கு சந்தா கட்டி
தெய்வம் இதழையும் தமிழ்நாடு
இ பேப்பரையும் பெருமை சேர்க்கும்
விதத்தில் முன்னேற்றம் செய்வது
வாசகர்களாகிய நம் அனைவரின்
கடமையாகும்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?