வாலிபப் பாவலர் வாலி

வாலிபப் பாவலர் வாலி


நேரிசை வெண்பா!


பழம்பெரும்

  பாடலாசான்   

    பக்குவ

      *வாலி*!

அழியாத.    

  காவியம்

     அன்பே...

       வழிகின்ற

*வாலிபப்*

     *பாவலர்*

          *வாலியே*!

              எந்நாளும்

கோலமுடன்

   காண்போமே

      கூறு!



பன்முகங்

  கொண்டாரே

     பாங்கான

         *வாலியே*!

நன்முகங்

  கொண்டே

    நனிசிறந்த...

      அன்புத்

திரையிசைப்

   பாடல்கள்

     தேர்ந்தே

        எழுதி

இருந்தமிழில்

   நின்றார்

      இனிது!



*பத்மசிறி*

    என்கின்ற

      பண்பு

       விருதினை

வித்தகமாய்ப்

  பெற்றாரே

    வீறுடன்...

      தத்துவப்பாடலில்

தங்கியே

   பாங்கானார்

      *வாலியே*

ஈடில்

  புகழுடன்

     ஏத்து!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%