" ஐயா..வணக்கம்ங்க!"
" வாய்யா சின்னசாமி ! எங்க இவ்வ
ளவு தூரம் ?"
" பக்கத்துல ஒரு வேலையா வந்தே
னுங்க. அப்படியே உங்கள பார்த்து
விசாரிச்சிட்டு போகலாமுன்னு...
ஐயா ரொம்ப கோபமா இருக்குற மாதிரி தெரியுது ?"
" ஆமாய்யா ! விவகாரமா ஒண்ணுச்
சொன்னா காது கொடுத்துக் கேட் கணும் இல்லையா ?"
" ஆமாங்க...யாருங்க ?"
" என் பையனத்தான் சொல்றேன் !"
" அப்படிங்களா ?"
" ஆமாய்யா ! பெத்தவன், அதுலயும் வயசானவன் சொன்னா கேட்கணும். நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கறதுன்னு இப்படி விட்டேர் த்தியான போக்குலயா இருக்கறது !"
" தப்புதாங்க ! ஏன் உங்க மகன் இப்படி
இருக்குறாருன்னுதெரியல்லீங்களே !"
" எல்லாம் புதுப்பொண்டாட்டி வந்திருக்காள்ங்குற திமிரு ! நான் கூடத்தான் சின்ன வயசில இருந் தேன். ஆனால் எங்கப்பா சொல்படி கேட்பேன். அவர் கிழிச்ச கோட்ட தாண்டமாட்டேன். என் பொண்டாட்டி சொல்றத எது எதுக்கு கேட்கணு
மோ அது அதுக்குத்தான் கேட்பேன்...."
" ஐயா ! அந்தக் காலம் வேற இந்தக்
காலம் வேறங்க....."
" அதுக்காக இந்தக் காலத்துல அப்
பன் பேச்சக் கேட்கக் கூடாதுன்னு
எழுதி வச்சிருக்குதா ? என்னம்மோ பேச வந்துட்டே!" சிடு சிடுத்தார்.
" அய்யய்யோ.! நான் அப்படிச் சொல்ல
லீங்க ! சின்னப்பசங்க போக்கு வர வர
இந்தக் காலத்துல மாறிக்கிட்டு வர
துன்னு சொல்லவரேனுங்க !"
" அப்படின்னா என் பையனுக்கு ஏத்தாப்பல நான் நடந்துக்கணும்னு சொல்றயா ?"
" அப்படி இல்லீங்க. கொஞ்சம் விட்டுப்
பிடிக்கணும்னு சொல்றேங்க !"
" ஏன்யா ! விவகாரமா ஒரு நல்ல விஷயம் பத்தி சொல்றேன். அவன் காது கொடுத்து கொடுத்து கேட்க மாட்டேங்குறான்னுதவிச்சுக் கிட்டி க்கிட்டிருக்கேன். நீ என்னம்மோ விட்டுப்பிடிக்கணுங்கறே !"
" அப்படி இல்லீங்க ! கொஞ்சநேரம் கழிச்சு சொல்லிப்பாருங்க. நிச்சயமா கேட்பாரு !"
" அப்படிங்குறே ?"
" ஆமாங்க....ஐயா...வந்து.."தலையைச் சொரிந்தார் சின்னசாமி.
" என்னய்யா..உனக்கு என்ன வே
ணும் ?" எரிச்சலடைந்தார்.
" இல்லைய்யா..வந்து..ஏதோ விவ காரம்னு சொன்னீங்க ! அது என்ன
விவகாரம்னு சொன்னீங்கன்னா...?"
என்று இழுத்தார் சின்னசாமி.
அசடு வழியக் கேட்ட சின்னசாமியை
கடுப்புடன் பார்த்தவர், " அதான் ஆரம்பத்திலேர்ந்து சொல்லிக்கி
ட்டிருக்கேன்ல !"
" அய்யா.! விவகாரம்னுதான் சொன் னீங்க ! அது என்ன விவகாரம்னு சொல்லலீங்களே ?" கெஞ்சல் கல
ந்த பரிதாபம் இழைந்தோடியது
குரலில் !
" திருப்பித்திருப்பி எத்தன தடவை
யா சொல்றது ? ஒரு தடவை சொன்
னால் புரிஞ்சிக்க மாட்டே ?"
" அய்யா! கடைசிவரை என்ன விவ காரம்னு சொல்லாமலே சமாளிச் சிட்டீங்க.நீங்க விவகாரமான ஆள் தான் !" வெறுப்புடன் சொல்லிவிட்டு நகர்கிறார் சின்னசாமி.
--வி.கே.லக்ஷ்மிநாராயணன்
...................................................