வீசி எறிய வேண்டியது கண்ணாடி பொருட்களை அல்ல. உங்கள் அடையாளங்களை
Oct 25 2025
11
_இந்த உலகத்தில் மிகவும் சவாலானது.._
_நம்மைப் பற்றிய பிறரது_ _கற்பனைகளோடு_
_நாம் போராடுவது தான்._
_*நாம் வாழ்கின்ற நாட்கள்தான் மிக குறைவு. அதில் வருந்துகின்ற நாட்களோ மிக அதிகம்.*_
_சில நேரங்களில்_ _தவறான புரிதலும்_
_முன் கோபமும்_ _சரியான நபரை இழக்கச் செய்து விடும்._
_*மகிழ்ச்சி என்பது உங்கள் வீட்டில் விளைவது.*_ _*அதை மற்றவர்*_
_*தோட்டத்தில்*_ _*தேடாதீர்கள்.*_
_அமைதியால் ஆனந்தமும், ஆனந்தத்தால் ஆரோக்கியமும், ஆரோக்கியத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்._
_*முடிந்து போனதை நினைத்து வருந்த வேண்டாம், வரப் போவதை நினைத்துக் கவலைப் பட வேண்டாம். நடப்பவை நடந்து கொண்டே தான் இருக்கும். எல்லாம் நன்மைக்கே.*_
_நேரம், நண்பர்கள், உறவுகள், ஆரோக்கியம் இவை எதுவுமே விலைப் பட்டியலோடு வருவதில்லை. ஆனால் அதன் விலை நமக்கு அதனை இழக்கும் போது புரிகிறது._
_*திறமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும். வாழ்வில் எந்த உயரத்தையும் எட்டிப்பிடிக்க முடியும்.*_
_உங்கள் மனதையும் உள்ளுணர்வையும் தைரியமாக பின் தொடர்ந்து செல்லுங்கள். அதுவே வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி._
_*மாறிப்போவதும், கடந்துபோவதும் பின்*_
_*பழகிப்போவதும் தான் வாழ்க்கை.*_

*🌹✍️முத்து ஆனந்த்
வேலூர் - 632 002*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?