வேறொருவரின் நிலத்தைக் காட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த நிலத்தரகர் கைது
சென்னை: வீட்டு மனையை விற்பதாக வேறொருவரின் நிலத்தை காட்டி ரூ.15 லட்சம் பண மோசடி செய்த நிலபுரோக்கர் கைது செய்யப்பட்டார். சென்னை, சாலிகிராமம், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (45).
இவரது நண்பர் மூலம், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள எலப்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (51) என்பவர் கடந்தாண்டு அறிமுகமானார். நிலத்தரகரான பாஸ்கரன், பாலச்சந்தரிடம் தனக்கு எலப்பாக்கத்தில் 2 வீட்டு மனைகள் இருப்பதாகவும், அதை விற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய பாலச்சந்தர், அந்த வீட்டு மனைகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவரும் பேசி, அந்த வீட்டுமனைகளுக்கு ரூ.15 லட்சம் விலை நிர்ணயம் செய்துள்ளனர். இழுத்தடிப்பு இதையடுத்து, பாலச்சந்தர், பாஸ்கரனிடம் ரூ.15 லட்சத்தை கொடுத்தார்.
ஆனால், பாஸ்கரன், அந்த வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த பாலச்சந்தர், அந்த வீட்டுமனைகளின் ஆவணங்களை சரி பார்த்தார்.
அப்போது, அந்த வீட்டு மனைகள் பாஸ்கரனுக்கு சொந்தமானது இல்லை என்பதும், அடுத்தவருக்கு சொந்தமான நிலத்தை காட்டி தன்னிடம் ரூ.15 லட்சத்தை பாஸ்கரன் மோசடி செய்திருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பாலச்சந்தர் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து பாஸ்கரனை கைது செய்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?