ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை பூஜையை முன்னிட்டு அபிஷேகம், அன்னதானம்

ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை பூஜையை முன்னிட்டு அபிஷேகம், அன்னதானம்

வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை பூஜையை முன்னிட்டு அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று புரட்டாசி மாத அமாவாசை பூஜையை முன்னிட்டு பகல் 12 மணிக்கு தொடங்கி அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அறுசுவையுடன் கூடிய அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாடகச்சேரி அன்னதான அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%