ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்ற அன்னாபிஷேக விழா
Nov 08 2025
98
திருகோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் அன்னாபிஷேகம்
மாத பௌர்ணமியை முன்னிட்டு திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரர் ஆலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவன் தரிசனம் செய்தனர்
புதுக்கோட்டை திருக்கோகரணம் பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை கோக்கரனேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவனுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் தேன் விபூதி மஞ்சள் மற்றும் பல்வேறு திரவப் பொருட்களால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பச்சரிசி சாதத்தை சிவன் முழுவதும் சாத்தப்பட்டு தொடர்ந்து காய்கறிகளால் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர் அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?