tamilnadu epaper

உலகம்-World

உலகம்-World News

10-Mar-2025 11:21 AM

சிரியாவில் அரசுப் படைகள், முன்னாள் அதிபரின் ஆதரவுக் குழு இடையே மோதல் :- 300 பேர் பலி

பெய்ரூட், மார்ச். 8டமாஸ்கஸ்: மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பாதுகாப்புப் படையினர், முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையிலான மோதலில் பொதுமக்கள் உட்பட சுமார் 300-க்�

10-Mar-2025 11:20 AM

அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க இந்தியா சம்மதம்: டிரம்ப்

வாஷிங்டன், மார்ச் 8அமெரிக்கா மீதான வரிகளை குறைக்க இந்தியா சம்மதித்துள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மீது இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள�

09-Mar-2025 11:09 AM

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 13 போலீசார் பலி

டமாஸ்கஸ், மார்ச் 7சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவின் பு�

08-Mar-2025 10:59 AM

எச்-4 விசா மூலம் அமெரிக்காவில் குடியேறிய ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு நெருக்கடி

எச்-4 விசா மூலம் அமெரிக்காவில் குடி யேறியுள்ள ஆயிரக்கணக்கான இந்திய குழந்தைகள் 21 வயதை நெருங்கி வரும் நிலையில் அவர்களது எதிர்காலம் நிச்சய மற்றதாக மாறியுள்ளது. கடந்த காலத்தில் 21 வயதை கடக�

08-Mar-2025 10:58 AM

அகதிகளை அனுப்ப ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா

வாஷிங்டன்,அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறை டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதிலும�

08-Mar-2025 10:56 AM

பிரிட்டனில் புதிய சட்டம் அறிமுகம்... முஸ்லீம், கருப்பின மக்களுக்கு குறைவான தண்டணை!

பிரிட்டனில் தற்போது ஒரு புதிய சட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இதன் கீழ் முஸ்லிம் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு வெள்ளை பிரிட்டிஷ் மக்களை விட குறைவான தண்டனை வழங்கப்பட�

08-Mar-2025 10:56 AM

பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால்...’ - ஹமாஸுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

வாஷிங்கடன்: மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால், அழிவைச் சந்திக்க நேரிடும் என்று ஹமாஸ் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக

08-Mar-2025 10:55 AM

உக்ரைனுக்கான நிதி உதவி - ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அவசர ஆலோசனை

பிரஸ்ஸல்ஸ்: உக்ரைனுக்கு அளிக்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று அவசர ஆலோசன�

08-Mar-2025 10:53 AM

கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பை ஏப்.2 வரை ஒத்திவைத்த ட்ரம்ப்: பின்னணி என்ன?மெக்சிகோவின் புறநகர்ப் பகுதியில் வரிசைகட்டி நிற்கும் சரக்கு வாகனங்கள். அமெரிக்கா வரி விதிப்பில் தளர்வை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் மெக்சிகோ நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுடன் கூடிய ட்ரக்குகளை நிறுத்திவைத்திருக்கும் காட்சி. வாஷிங்டன்: மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் நடவடிக்கையை ஏப்ரல் 2 வரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதனையடுத்து கனடாவும் அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் முடிவை நிறுத்திவைத்துள்ளது. இந்தப் பின்னணியில் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி, பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் அமெரிக்க ஆட்டோமொபைல் முன்னணி நிறுவனங்களின் தலையீடு ஆகியன இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு பரஸ்பர வரி குறித்து அவர் அறிவித்தார். அண்மையில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றியபோதும் ட்ரம்ப் பரஸ்பர வரி குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்துனார். அப்போது அவர் பேசுகையில், “ அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதேபோல் மற்ற நாடுகளும் அதிக வரி விதிக்கின்றன. இது நியாயமற்றது. ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே இந்தியா வரி விதிக்கிறது. ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள், நாம் விதிக்கும் வரியை விட அதிக வரிகளை விதிக்கின்றன. அதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனவே, மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும். அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பது பல ஆண்டுகளாக உள்ளது. இப்போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. வர்த்தக கொள்கைகளில் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் சமமற்ற நிலை உள்ளது. அதை சரி செய்வதற்குதான் பரஸ்பரம் வரி விதிக்கும் முறையை அமல்படுத்த நினைக்கிறேன்.” என்றார். ஏப்ரல் 2 வரை நிறுத்திவைப்பு: முன்னதாக, மெக்சிகோ மற்றும் கனடாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கும் கோப்புகளில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டார். இதனால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கும், பண வீக்கம் தாறுமாறாக உயரும் என ட்ரம்ப்பின் முடிவின் மீது அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ட்ரம்ப் வரி விதிப்பை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில், “அமெரிக்கா - மெக்சிகோ - கனடா ஒப்பந்தத்தை ஏற்று கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படாது. எனினும், இது ஒருமாத காலத்திற்கு மட்டும் தான் அமலில் இருக்கும்.” என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. முக்கிய சந்திப்பால் மாற்றம்! இந்த ஒப்பந்தம் ரத்தாவதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டின் ஆட்டோமொபைல் நிறுவன ஜாம்பவான்களான ஸ்டெலாண்டிஸ், ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வரி விதிப்பு அமலுக்கு வருவது ஒரு மாத காலம் தள்ளிவைக்கப்பட்டாலுமே கூட கனடாவில் இருந்து இறக்குமதியாகும் 62 சதவீத பொருட்கள் புதிய வரி விதிப்பை சந்தித்தே ஆகும் என்று வெள்ளி மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். ட்ரம்ப்பின் வரி விதிப்பு ஒத்திவைப்பு முடிவானது அமெரிக்க கார் உற்பத்தியாளர்களுக்கே சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் வரி விதிப்பு ஒத்திவைப்பை அறிவித்தவுடன் கனடா நிதியமைச்சர் டொமினி லேப்ளான்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஏப்ரல் 2 வரை அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை நிறுத்திவைக்கிறோம். இரண்டாம் அலை வரி விதிப்பை நிறுத்துவதோடு, முந்தைய வரிகளை விலக்குவது குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். ‘பொருளாதார நிலை அறிந்த செயல்பாடு..’ ட்ரம்ப்பின் உத்தரவு குறித்து கேட்டோ பொருளாதார ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் ஸ்காட் லின்ஸிகோம், “பொருளாதார நிலவரத்தின் உண்மை நிலையறிந்து ட்ரம்ப் செயல்பட்டுள்ளார். வரி விதிப்பு விநியோகச் சங்கிலியை பாதிக்கும் என்பதை உணர்ந்துள்ளார். பங்குச்சந்தைகளுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு உகந்ததாக இல்லை.” என்றார். ஜனவரியில் அதிபரானதிலிருந்தே அதிபர் ட்ரம்ப் பல்வேறு வரி விதிப்புகளை அறிவித்து உலகளாவிய வரிப் போரை முன்னெடுக்க முயற்சித்து வருகிறார் என்ற விமர்சனம் இருக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.

மெக்சிகோவின் புறநகர்ப் பகுதியில் வரிசைகட்டி நிற்கும் சரக்கு வாகனங்கள். அமெரிக்கா வரி விதிப்பில் தளர்வை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் மெக்சிகோ நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுட�

08-Mar-2025 10:51 AM

80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு

அமெரிக்காவில் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் 'அரச�