tamilnadu epaper

இன்னுமென்ன உறக்கம்

இன்னுமென்ன உறக்கம்


விதைகள் உறங்கிவிட்டால் 

விருட்சங்கள் 

எழலாகுமா


கதிரவன் 

உறங்கிவிட்டால் 

காலமாற்றம் 

நிகழுமா


காற்றது 

உறங்கிவிட்டால்

உயிர்கள் 

உழலுமா


கடலது 

உறங்கிவிட்டால் 

மேகங்கள் 

கூடுமா


வார்த்தைகள் 

உறங்கிவிட்டால்

கவிதைதான் 

பிறக்குமா


மனமது 

உறங்கிவிட்டால்

எழுச்சிதான் 

இருக்குமா


வெற்றிகள் 

உறங்கிவிட்டால்

முயற்சிகள்

விழிக்குமா


முயற்சிகள்

உறங்கிவிட்டால்

முன்னேற்றம்

கிடைக்குமா


இளைய‌தலைமுறை

உறங்கிவிட்டால்

தேசம் தான் 

நிலைபெறுமா



உறக்கம் 

புலன்களுக்கான

மலர்ச்சியே அன்றி

தளர்ச்சி அல்ல.


மானுடமே! 

உறங்கியே 

வாழ்வைக் கழிக்காமல்

உதாரணமாய் 

வாழ்ந்திட வழிகளை 

செப்பனிடுவோமா.... 



கவிஞர் மு.வா.பாலாஜி

ஓசூர்