tamilnadu epaper

ஓவியக் கனவுகள்

ஓவியக் கனவுகள்


காரண காரியம் 

தெரியாமல்தான் 

நான் உன்னை அழைக்கிறேன் 

காலங்கள்

 கடந்தும் 

உன் காதுகளில் 

விழாத மெளன 

ஓசையில் 

நான் உனக்கு இல்லை 

நீ எனக்கு வேண்டாம் 

ஆனாலும் 

நான் 

உன்னை 

அழைக்கிறேன் 

எனக்கு மட்டுமே கேட்கும் 

ஏதோ ஒரு மொழியில்

என் இதயம் விரும்பும் உன் காதலுக்காக மட்டும்....



-மனுசியபுத்திரியும் தேவனும் 

கந்தர்வகோட்டை