அர்ச்சகர்களின் குழந்தைகள் மேற்படிப்புக்கு ரூ.60 லட்சம் கல்வி உதவித் தொகை : 600 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் அறநிலையத்துறை நிர்வாகப் பணி

சென்னை, ஆக 12–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகையாக 600 மாணவர்களுக்கு மொத்தம் 60 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்து-க்கான வங்கி வரைவோலைகளை வழங்கினார். இதுவரை மொத்தம் 693 பேருக்கு ஏற்கனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகப் பணி தொகுதியில் உதவி ஆணையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயர்கல்வி பயிலும் அர்ச்சகர்களின் பிள்ளைகள் பயன்பெறுவர். 2023 – 2024 மற்றும் 2024 – 2025 ஆகிய நிதியாண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரால் 900 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு என மொத்தம் 34 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் முதலமைச்சர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகப் பணி தொகுதியில் உதவி ஆணையர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சி.பழனி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?