கவிஞர் இரா .இரவி !
இயற்கையை மனிதன் சிதைக்கச் சிதைக்க
இயற்கை மனிதனைச் சிதைக்கும் உணர்க !
ஏரி குளம் கண்மாய் கால்வாய் ஆக்கிரமிப்பு
எங்கு செல்லும் மழை நீர் சிந்திப்பீர் !
குளம் புதிதாக வெட்டாவிட்டாலும்
குளத்தைத் தூர் வாரி புதுப்பிக்கலாமே !
ஏரி புதிதாக கட்டாவிட்டாலும்
ஏரியின் கரை உயர்த்தி இருக்கலாமே !
விளைநிலங்களை வீட்டடி மனையாக்கும்
விபரீத எண்ணங்களுக்கு முடிவு கட்டுக !
நீர் வழிகளின் ஆக்கிரமிப்பு உயிருக்கு உலை வைப்பு
நீர் இனியாவது உணர்ந்து நடந்தால் சிறப்பு !
பணத்தாசையால் இயற்கை அழித்தல் கேடு
பண்பாக நடந்து இயற்கை வளம் காப்போம் !
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%