ஈரோட்டில் நவம்பர் 26ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.605 கோடியில் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்

ஈரோட்டில் நவம்பர் 26ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.605 கோடியில் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்


முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: அமைச்சர் முத்துசாமி ஆய்வு



முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் நவம்பர் 26ந் தேதி ரூ.605 கோடி மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் அவர், மாவீரன் பொல்லான் உருவ சிலையுடன் கூடிய அரங்கத்தையும், பால்வளத்தந்தை என அனைவராலும் அழைக்கப்படும் சி.கு.பரமசிவன் சிலையையும் திறந்து வைக்கிறார். மேலும் அரசு விழாவில், 1.85 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வுப் பணிகளுக்காக கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.


கோவையில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.


அப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், நவம்பர் 25 அன்று காலை, உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கோவை செம்மொழிப் பூங்காவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்கள்.


அதனைத் தொடர்ந்து, அன்று மாலையில் தொழில் துறை சார்பில் நடைபெறும் “டிஎன்ரைஸ்" (TNRise) நிகழ்ச்சியில், முதலமைச்சர் முன்னிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.


மாவீரன் பொல்லான் அரங்கம் திறப்பு


இரண்டாம் நாளான நவம்பர் 26 அன்று காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.


மாவீரன் பொல்லானது வீரத்தை போற்றும் வகையில் ஜெயராமபுரத்தில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டித்தருமாறு, பொல்லான் வீர வரலாறு மீட்புக் குழு பல ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையை ஏற்று, அரசு 4.90 கோடி ரூபாய் மதிப்பில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் அமைத்துள்ள அவரது முழு உருவச்சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 26 அன்று காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார்கள்.


தொடர்ச்சியாக, ஓடாநிலையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்திற்கு நேரில் சென்று, அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.


அதனைத் தொடர்ந்து, ஈரோடு, சோலார் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.605 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%