ஐசிஎப் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை! ஆ. ராசா கோரிக்கை
சென்னை, பிப். - தமிழ்நாடு உட்பட நாட்டில் இயங்கும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் கள் மற்றும் ‘அம்ரித் பாரத்’ ரயில்களின் பட்டி யல் குறித்து மக்களவை யில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள் தயாரிக்கும் ரயில் பெட்டி தொழிற்சாலைகளின் விவ ரங்கள் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ள ஆ.ராசா, ஐசிஎப் பெரம்பூர் உட்பட ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க அரசு முன்மொழிகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். 2026 ஜனவரி 1 நிலவரப்படி, கடந்த மூன்று ஆண்டு களில் தெற்கு ரயில்வே யில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக் கை என்ன? என்பது உள்ளிட்ட கேள்விகளை ஆ. ராசா கேட்டுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?