ஒரே இரவில் 470 ட்ரோன், 48 ஏவுகணை வீசி உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு: ஜெலன்ஸ்கி கண்டனம்

ஒரே இரவில் 470 ட்ரோன், 48 ஏவுகணை வீசி உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலில் 9 பேர் உயிரிழப்பு: ஜெலன்ஸ்கி கண்டனம்


 

மாஸ்கோ: உக்​ரைன் மீது ஒரே இரவில் 470 ட்ரோன்​கள், 48 ஏவு​கணை​களை வீசி ரஷ்யா கடுமை​யான தாக்​குதலை நடத்​தி​யது. அமெரிக்கா தலை​மையி​லான நேட்டோ படை​யில் சேர உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி விரும்​பி​னார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.


அதை ஜெலன்​ஸ்கி நிராகரித்​த​தால், கடந்த 2022ம் ஆண்டு பிப்​ர​வரி 24ம் தேதி உக்​ரைன் மீது ரஷ்யா போர் தொடங்​கியது. போரை நிறுத்த சர்​வ​தேச அளவில் எடுக்​கப்​பட்ட முயற்​சிகள் தோல்வி அடைந்​தன. இதற்​கிடை​யில் இரு தரப்​பும் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன.


இந்​நிலை​யில், உக்​ரைன் மீது நேற்​று ​முன்​தினம் இரவு 470 ட்ரோன்​கள், 48 ஏவு​கணை​களை வீசி ரஷ்யா கடுமை​யான தாக்​குதலை நடத்​தி​யது. தாக்​குதலுக்​குப் பிறகு பற்றி எரி​யும் கட்​டிடங்​கள், சேதம் அடைந்த இடங்​களின் வீடியோவை உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி நேற்று வெளி​யிட்டு கண்​டனம் தெரி​வித்​தார்.


இதுகுறித்து ஜெலன்​ஸ்கி கூறிய​தாவது: ரஷ்யா தாக்​குதலில் டெர்னோபில் பகு​தி​யில் 9 மாடி குடி​யிருப்பு கட்​டிடம் தரைமட்டமாகி உள்​ளது. இதில் 9 பேர் உயி​ரிழந்​தனர். 12-க்​கும் மேற்​பட்​டர்​கள் காயம் அடைந்​தனர். கட்​டிட இடி​பாடு​களில் சிக்கி உள்​ளவர்​களை மீட்​கும் பணி​யும் பற்றி எரி​யும் கட்​டிடங்​களில் தீயை அணைக்​கும் பணி​யும் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தாக்குதலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல் தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு ஜெலன்​ஸ்கி கூறியுள்​ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%